திருவாரூர், ஜன.13: தொழிலாளர் நல உதவி ஆணையர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு அரசு அறிவித்தவாறு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியானது திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவாரூர், கூத்தாநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்டவர்களுக்கு திருவாரூர் கஸ்தூரிபாகாந்தி பள்ளியிலும், மன்னார்குடி, நீடாமங்கலம் தாலுகாவிற்கு மன்னார்குடியில் தூயவளனார் பெண்கள் பள்ளியிலும், திருத்துறைப்பூண்டி தாலுகாவிற்கு திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியிலும், நன்னிலம், வலங்கைமான் மற்றும் குடவாசல் தாலுகாவிற்கு நன்னிலம் அரசு ஆண்கள் பள்ளியிலும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியானது கடந்த 10ம்தேதி முதல் நடந்து வருகிறது.