திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் தை பிரமோற்சவ விழாவின் மூன்றாம் நாளான நேற்று காலை கருட சேவை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் தை மாத பிரமோற்சவ விழா இரு தினங்களுக்கு முன் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து மூன்றாம் நாளான நேற்று காலை 5 மணிக்கு உற்சவர் வீரராகவ பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோபுர தரிசனமும், தொடர்ந்து கருட வாகனத்தில் உற்சவர் கோயில் மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.