திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீரால் 180 ஏக்கர் நெற்பயிர்கள் அழுகியது. இதற்கு நிவாரணம் கோரி கும்மிடிப்பூண்டி அடுத்த குருவாட்டுச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் கோமதி சேகர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் நேற்று அழுகிய நெற்பயிருடன் கலெக்டரை முற்றுகையிட்டு நிவாரணம் கேட்டு முறையிட்டனர். இதைத்தொடர்ந்து திரளான விவசாயிகள் இது சம்பந்தமான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “கும்மிடிப்பூண்டி வட்டத்தில் அடங்கிய குருவாட்டுச்சேரி, வேற்காடு, நங்கபள்ளம், ஏனாதி மேல்பாக்கம் கிராமத்தில் விவசாயத்தையே நம்பி நாங்கள் வாழ்ந்து வருகிறோம். குருவாட்டுச்சேரியில் 100 ஏக்கர் மற்றும் வேற்காடு கிராமத்தில் 80 ஏக்கர் நெற்பயிர்கள் பயிரிட்டு இருந்தோம்.