தரைமட்டமானது தோட்ட கிணறு ஆத்தூர் அருகே பரபரப்பு

சின்னாளபட்டி, ஜன. 12: ஆத்தூர் கோழிப்பண்ணை பிரிவில் இருந்து ஆத்தூருக்கு செல்லும் வழியில் கிறிஸ்துராஜா என்பவருக்கு தோட்டம் உள்ளது. இங்கு 30 அடி அகலம், 50 அடி ஆழத்தில் உள்ள கிணறு முழுவதும் கான்கிரீட் கலவையால் கட்டப்பட்டு, மின்மோட்டார் அறையும் வைத்திருந்தனர். நேற்று முன்தினம் பெய்த தொடர்மழையால் கிணற்றின் பக்கவாட்டு சுவர் திடீரென இடிந்து விழுந்தது. சிறிதுநேரத்தில் அருகேயிருந்த மோட்டார் அறையும் கிணற்றிற்குள் விழுந்து விட்டது. அதிர்ஷ்டவசமாக கிணற்று கரையோரம் மாட்டுக்கூடம் இடிந்து விழாததால் பசு மாடுகள் உயிர் தப்பின. தற்போது கிணறு தரை மட்டமாக இருப்பதால் பொதுமக்கள், கால்நடைகள் உள்ளே விழாத அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Stories: