பைக் மோதி தொழிலாளி பலி

ஈரோடு, ஜன. 12:  ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் நஞ்சப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் சாகுல் அமீது (65). இவர் பி.பெ.அக்ரஹாரம் வண்டிபேட்டையில் முட்டை கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சாகுல் அமீது நேற்று முன்தினம் மதியம் அவர் வேலை பார்க்கும் கடைக்கு செல்வதற்காக ரோட்டை கடக்க முற்பட்டார். அப்போது, அந்த வழியாக அசோகபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஓட்டி வந்த பைக், எதிர்பாராதவிதமாக சாகுல் அமீது மீது மோதியது.

இதில், சாகுல் அமீது படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் சாகுல் அமீதை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி சாகுல் அமீது நேற்று அதிகாலை உயிரிழந்தார். இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: