மது விற்றதாக பெண் உட்பட 6 பேர் கைது

ஈரோடு, ஜன. 12:   ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை மற்றும் அரசு அனுமதியின்றி ஓட்டல், ரோட்டோர கடைகளில் மது அருந்த அனுமதித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதன்பேரில், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில், போலீசார் நேற்று முன்தினம் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்றனர். இதில், கடத்தூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் உக்கரம் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்டதாக அதே பகுதியை சேர்ந்த ராமன் மனைவி பாப்பாத்தி (50) என்பவரை போலீசார் கைது செய்து, 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.  சென்னிமலை போலீசார், அரச்சலூர் ரோட்டில் மது விற்ற திருப்பூர் மாவட்டம் மருதுறையை சேர்ந்த பெரியசாமி (47) என்பவரை கைது செய்து, 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், அரசு அனுமதியின்றி மது அருந்த அனுமதித்தாக 4 பேரை ஈரோடு போலீசார் கைது செய்தனர்.

Related Stories: