முதியவர் மாயம்

திருச்சி, நவ.29: திருச்சியில் மாயமான முதியவரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் சுப்பிரமணியம்(49). தனியார் நிறுவன ஊழியர், கடந்த நவ. 5ம்தேதி மனைவி கலாமேரியிடம்(40) வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள், வீடுகள் என எங்கு தேடி பார்த்தும் கிடைக்காததால் இதுகுறித்து பொன்மலை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: