தாய்மொழி தின உறுதிமொழியேற்பு: திருச்சி மண்டல போக்குவரத்து கழக ஊழியர்கள் ஏற்றனர்

திருச்சி, பிப். 21: ஒவ்வொரு ஆண்டும் பிப்.21ம் தேதி உலகத் தாய்மொழி நாள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பிப்.21ம் தேதி இன்று விடுமுறை தினம் என்பதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம், திருச்சி மண்டல அலுவலகத்தில் உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி மண்டல பொது மேலாளர் சதீஷ்குமார் முன்னிலையில் அனைத்து போக்குவரத்துக் கழக பணியாளர்கள் உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி நேற்று ஏற்றுக்கொண்டனர். உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் துணை மேலாளர்கள் ராமநாதன்(பணியாளர் மற்றும் சட்டம்), சுரேஷ் குமார் (வணிகம்), புகழேந்தி ராஜ்(தொழில்நுட்பம் )மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள் பலர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

 

Related Stories: