திருச்சி, ஜன.11: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 31.12.2020 அன்றைய தேதியில் 5 வருடம் முடிவடைந்த, முறையாக பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, பிளஸ்2, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்கள் அனைவரும் தகுதி உடையவர் ஆவர். மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை, எழுதப்படிக்க தெரிந்தவர் முதல் 10ம் வகுப்பு, பிளஸ்2 மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்து 31.12.2020 அன்றைய தேதியில் ஓராண்டு முடிவடைந்த பதிவுதாரர்கள் தகுதி உடையவர் ஆவர். ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.