உத்தமபாளையம், ஜன. 11: உத்தமபாளையம் அருகே, அனுமந்தன்பட்டியில் உள்ள 18ம் கால்வாயில் மர்மமாக இறந்து கிடந்த கூலித்தொழிலாளியில் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கம்பம் அருகே உள்ள புதுப்பட்டி சாஸ்தாகோயில் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (47), கூலித்தொழிலாளி. கடந்த சில தினங்களாக உடல் நிலை சரியில்லாததால், அவர் வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 27ம் தேதி, வீட்டிலிருந்து சென்றவர் மீண்டூ ம் வரவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர மற்றும் உறவினர்களுக்கும் பல இடங்களில் தேடியும், அவரை கானவில்லை. இந்த நிலையில் அனுமந்தன்பட்டி-க.புதுப்பட்டி 18ம் கால்வாய், தண்ணீரில் அழுகிய நிலையில் சடலம் கிடப்பதாக, உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.