ஈரோடு: சித்தோடு ஆவின் பால்பண்ணை வளாகத்தில் பால்வளத் தந்தை எஸ்.கே.பரமசிவன் சிலையை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பில் எஸ்.கே.பரமசிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டவர் பால்வளத் தந்தை எஸ்.கே.பரமசிவன்.
