திருப்போரூர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் அலுவலகம் திறப்பு

திருப்போரூர். ஜன, 11:  மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.  நகர செயலாளர் பிரபு தலைமை தாங்கினார் திருப்போரூர் சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர்கள் நல்லூர் டில்லி, மல்லை சார்லஸ், மானாம்பதி ரமேஷ், நாவலூர்  குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், இக்கட்சியின், மாநில பொதுச் செயலாளர் மவுரியா புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். பல்வேறு கட்சியிலிருந்து விலகியவர்கள். அலுவலக திறப்பு விழாவின்போது, மக்கள் நீதி மய்யம் கட்சியில் 30க்கும் மேற்பட்டோர் இணைந்தனர். செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் ராஜீவ் குமார், இளைஞரணி மண்டலப் பொறுப்பாளர் மயில் வாகனன், இளைஞர்

அணி மாவட்ட செயலாளர் அருள் பிரகாசம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்,

Related Stories: