காஞ்சிபுரம், ஜன.11 : மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ராயல் என்பீல்டு மோட்டார் நிறுவனம் சார்பில் வளாக நேர்காணல் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சேகர் மற்றும் துணை முதல்வர் ஜானகிராமன் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த நிகழ்ச்சியை தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழும மனிதவள மேம்பாட்டுத் துறை டீன் ஆண்டனி வளன் ஏற்பாடு செய்திருந்தார். இந்த வளாக நேர்காணலில் ராயல் என்பீல்டு மோட்டார் நிறுவன மனிதவள மேம்பாட்டுத்துறை பிரதிநிதிகள் கலந்துகொண்டு மாணவர்களுக்கான நேர்காணல்களை நடத்தினர். மேலும் அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பாதுகாப்பான முறையில் சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட நெறிமுறைகளைப் பின்பற்றி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட இந்த வளாக நேர்காணலில் 12 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி நியமனச் சான்றிதழ் வழங்கப்பட்டது.