திருக்கோவிலூர், ஜன. 7: திருக்கோவிலூர் அடுத்த டி.குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன் மகன் பிரகாஷ்(40). இவர் கடந்த பத்து வருடமாக எலக்ட்ரீஷியன் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில் வேலை நிமித்தமாக அருங்குறிக்கை பகுதிக்கு வந்து பணியை முடித்துவிட்டு மீண்டும் குன்னத்தூருக்கு வரும்போது கொடியூர் கிராமத்தின் அருகே பின்னால் கரும்பு லோடு ஏற்றி கொண்டு வந்த டிராக்டர் மோதியதில் சம்பவ இடத்திலே இறந்தார்.