ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் அருகே திமுக ஒன்றிய செயலாளரின் சகோதரரை கொல்ல முயன்ற கூலிப்படையினர் 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், முக்கிய குற்றவாளிகளை பிடிக்க வலை வீசி தேடி வருகின்றனர். சென்னை செங்குன்றம் அருகே சோழவரம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். இவர் சோழவரம் பகுதி திமுக தெற்கு ஒன்றிய செயலாளராக உள்ளார். இவரது அண்ணன் கண்ணன் (46). ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவர் கடந்த 27ம் தேதி பெரியபாளையம் அருகே காரில் சென்றபோது, இவரை கொலை செய்ய மர்ம கும்பல் முயன்றது. இது குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், கொலை வழக்கில் மர்ம நபர்கள் குறித்து பெரியபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து.