கரூர், ஜன. 6: கரூர் திருக்காம்புலியூர் பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி(52). இவர், நேற்று முன்தினம் மாலை வெளியூர் செல்வதற்காக திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் பாப்பாத்தியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர்.இந்த சம்பவம் குறித்து பாப்பாத்தி டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.