உத்தமபாளையம், ஜன. 5:உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 13 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளின் பணிகளை கவனிக்கக்கூடிய, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் (பிடிஓ.,க்கள்) ஓராண்டில் அடுத்தடுத்து மாற்றப்பட்டுள்ளனர்.
ஒன்றியக் கவுன்சிலர்களால் நெருக்கடி கொடுக்கப்பட்டு மாற்றப்பட்டதாக புகார் எழுந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பி.டி.ஓ.வாக பணியாற்றிய தனலட்சுமி மாற்றப்பட்டார். இதை தொடர்ந்து உத்தமபாளையம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டம், கூட்டமைப்பு தலைவர் ராயப்பன்பட்டி பால்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், அனைத்து ஊராட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். சங்கத்தின் துணைத்தலைவர் ராமசாமிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பவுன்ராஜ் வரவேற்றார்.கூட்டத்தில், ‘தமிழக அரசு கிராம ஊராட்சிகளின் முன்னேற்றத்திற்காக, நிதி வழங்கி குடிநீர், வடிகால், தெருவிளக்குகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்ய உத்தரவிட்டுள்ளது. இதன்படி, அதிகாரிகளின் முழு ஒத்துழைப்போடு, பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெறுகிறது.