அலங்காநல்லூர், ஜன. 5: அலங்காநல்லூர் பகுதியில் நடந்த பொங்கல் பரிசு விழாவில் எம்எல்ஏ வர 3 மணிநேரம் தாமதமானதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். அலங்காநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட கொண்டையம்பட்டி, முடுவார்பட்டி, சின்ன இந்தைகுளம், அழகாபுரி பகுதிகளில் நேற்று பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் விழா நடந்தது. எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு, ரூ.2,500 பணத்தை வழங்கினார். இதில் கூட்டுறவு சங்க தலைவர் பாலாஜி, நகர செயலார் அழகுராஜன், ஜல்லிக்கட்டு விழா குழு நிர்வாகிகள் சுந்தர்ராஜன், சுந்தர்ராகவன், முன்னாள் யூனியன் தலைவர் ராம்குமார், கோட்டாட்சியர் பழனிக்குமார், செயல்அலுவலர் சின்னசாமி பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.