குடியாத்தம், ஜன.4: குடியாத்தம் ஒன்றியம் சேம்பள்ளி ஊராட்சியில் திமுக மக்கள் சபை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ரவி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜய் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், எம்பி கதிர்ஆனந்த் கலந்து கொண்டு பேசினார். மேலும், அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டு அறிந்தார். பின்னர் திமுகவை ஆதரிப்போம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டனர். முன்னதாக கூட்டத்தில் மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் பலர் திமுகவில் இணைந்தனர்.