சாத்தூரில் திமுக இளைஞரணி அறிமுக கூட்டம்

சாத்தூர், ஜன. 1:  சாத்தூரில் விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நகர, ஒன்றிய, பேரூர் கழக அமைப்பாளர், துணை அமைப்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், தென்காசி எம்பியுமான தனுஷ்குமார் தலைமை வகிக்க, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சூரியநாராயணன், பாபு, ரவிக்கண்ணன், பாலசந்தர், ஆனந்த் முன்னிலை வகித்தனர்.  தெற்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான சாத்தூர் ராமச்சந்திரன் ஆலோசனைகளை வழங்கி பேசுகையில், ‘வாக்காளர்கள் அளிக்கும் ஓட்டுகள் பயனுள்ளவையாக இருக்கும் வகையில் மாற்ற வேண்டியது இளைஞரணி அமைப்பாளர்களின் முக்கிய செயலாகும்’ என்றார். தொடர்ந்து இளைஞரணி அணி அமைப்பாளர்கள் வரும் சட்டமன்ற தேர்தல் பணி குறித்து கலந்தாலோசித்த பின், இளைஞரணி செயல்பாடுகள் குறித்து 10க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நகர செயலாளர் குருசாமி, கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் கடற்கரை ராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் மற்றும் சாத்தூர், ராஜபாளையம், திருவில்லிபுத்தூர் பகுதிகளை சேர்ந்த இளைஞரணி அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: