சென்னை: மக்களின் வாக்குரிமையை பறிக்கும் பாஜகவின் சதித்திட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவளிக்கிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ஆதரிக்கும் எடப்பாடி பழனிசாமியின் முடிவு கண்டனத்துக்குரியது. கண்ணைக் கட்டிக்கொண்டு கிணற்றில் விழ வேண்டும் என்று பாஜக சொன்னாலும் செய்வார் பழனிசாமி என அவர் தெரிவித்தார்.
