ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கரூர் பசுபதீஸ்வரர் ேகாயிலில் திருக்கல்யாணம்

கரூர், டிச. 30: ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது. ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திர நாளில் சிவன் கோயில்களில் ஆருத்ர தரிசன நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. மிக முக்கியமான விழாக்களில் இதுவும் ஒன்று என்பதால் இந்த நிகழ்வின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு சென்று வருகின்றனர். அந்த வகையில் கரூர் பசுபதீஸ்வரா கோயிலில் ஆருத்ர தரிசன விழாவினை முன்னிட்டு நேற்று காலை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கல்யாண பசுபதீஸ்வரர் உடனாகிய அலங்காரவல்லி சவுந்திரநாயகிக்கு பல்வேறு அபிஷேக ஆராதனை நிகழ்வுகளுக்கு பிறகு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories: