சாத்தான்குளம், டிச. 30: செக் மோசடி வழக்கில் வைகுண்டம் விவசாயிக்கு 6மாதம் சிறை தண்டனை விதித்து சாத்தான்குளம் நீதிபதி உத்தர
விட்டார். நாசரேத் அருகேயுள்ள வெள்ளரிக்காயூரணியைச் சேர்ந்தவர் ராஜபாண்டியன் மகன் காசிராஜன்(43). விவசாயியான இவரிடம் வைகுண்டம் மேலபுதுக்குடியைச் சேர்ந்த விவசாயி குருசாமி(58) கடந்த 3.02.2015 அன்று அவரது மகள் திருமணத்துக்கு ரூ.3லட்சம் கடன் வாங்கியுள்ளார். 2மாதத்தில் பணத்தை திருப்பி வழங்குவதாக தெரிவித்திருந்த அவர், காசிராஜனுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் காசோலையை வழங்கினார்.