சென்னை: மதுரவாயல் சீமாத்தம்மன் நகரில் உள்ள ஒரு வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 பைக்குகள் நேற்று முன்தினம் நள்ளிரவு தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் 6 பைக்குகளும் எரிந்து நாசமானது. தகவலறிந்து வந்த மதுரவாயல் போலீசார், அருகில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, ஒரு பெண் பைக்குகளுக்கு தீ வைப்பது தெரியவந்தது. விசாரணையில், அந்த வீட்டில் வசிக்கும் பழனிபாபு குமாரின் கள்ளக்காதலி திவ்யா பைக்கிற்கு தீவைத்து தெரியந்தது.