நம்மாழ்வார் நினைவு தினத்தையொட்டி நாகையில் சைக்கிள் பயணம்

நாகை, டிச.29: இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு தினத்தை முன்னிட்டு உடல் ஆரோக்கியத்திற்காக சைக்கிள் பயணம் நாகையில் நடந்தது. இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவுநாளை (30ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு நாகையில் உடல் ஆரோக்கியத்திற்காக சைக்கிள் பயணம் நடந்தது. நாகை அவரித்திடலில் தொடங்கிய மிதிவண்டி பயணம் அமிர்தா பள்ளி, கிழக்கு கடற்கரை சாலை, பாரதிதாசன் உறுப்புக்கல்லூரி வழியாக வெளிப்பாளையம் வந்தடைந்தது. ஒருங்கிணைப்பாளர் மருதாச்சலம், ராஜேஷ் மற்றும் மாணவர்கள் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்

Related Stories: