தனியார் அமைப்பு சார்பில்‘பசுமையை நோக்கி’ மாரத்தான்

 

அவிநாசி, அக். 14: அவிநாசி அடுத்த கணியாம்பூண்டியில் கே.சி.எம்.பவுண்டேஷன் சார்பில் ‘பசுமையை நோக்கி’ மாரத்தான் போட்டி நடந்தது. இதில், கணியாம்பூண்டியில் துவங்கி, தீரன் சின்னமலை கல்லூரி வரை என ஒரு கி.மீ. முதல் 12 கி.மீ. வரை பல்வேறு பிரிவுகளில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 8 வயது முதல் 50 வயதுக்கு மேற்பட்டோர் வரை ஆண்கள், பெண்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் ரஞ்சித், ஆடிட்டர் சுந்தரராமன் ஆகியோர் பரிசு வழங்கினர். விழாவில் ஊராட்சி முன்னாள் தலைவர் மாரிமுத்து, சுதாகர் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர்.

 

 

Related Stories: