வத்தலகுண்டுவில் பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள்

வத்தலக்குண்டு, டிச.28: வத்தலகுண்டு  மாரியம்மன் கோவில் முன்பாக ஐயப்பன் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. குருசாமி முருகன் பூஜை செய்து முதல் ஆளாக பூக்குழி இறங்கினார். அதைத்தொடர்ந்து நிர்வாகிகள் வக்கீல்சரவணன், கல்யாணி மற்றும் வத்தலகுண்டு, பழைய வத்தலக்குண்டு, விராலிப்பட்டி, விருவீடு உள்பட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த 300 பேர் இறங்கினர். சிறுவர்களும் பூக்குழி இறங்கினர். சிலர் குழந்தைகளை தோளில் தூக்கிக்கொண்டு பூக்குழி இறங்கினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி நின்று ஆரவாரம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வத்தலக்குண்டு போலீசார் செய்திருந்தனர்.

Related Stories: