கோவை,டிச.28: நல்லறம் அறக்கட்டளை மற்றும் வெஸ்டன் வேலி சைக்கிளிங் சார்பில் எம்.டி.பி சேலஞ்ச் 3-வது ஆண்டு சைக்கிள் போட்டி கோவை சுண்டாகாமுத்தூர் பகுதியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியை, அறக்கட்டளையின் தலைவர் எஸ்.பி. அன்பசரன் வழிகாட்டுதல்படி, நல்லறம் அறக்கட்டளை தலைமை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியானது 8 பிரிவுகளில் நடந்தது. 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு 3.5 கிலோமீட்டர் சைக்கிள் போட்டியும், 14 வயது முதல் பெரியவர்களுக்கான 7.5 கிலோ மீட்டர் சைக்கிள் போட்டியும் நடைபெற்றது.