சேந்தமங்கலம், டிச.25: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஒன்றிய திமுக சார்பில், அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் கிராமசபை கூட்டம் துத்திக்குளம், பெரியகுளம் ஊராட்சிகள், காளப்பநாயக்கன்பட்டி சேந்தமங்கலம் பேரூராட்சிகளில் நேற்று நடந்தது. ஒன்றிய செயலாளர் அசோக் குமார் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்குமார், தலைமை கழக பேச்சாளர் முன்னாள் எம்எல்ஏ சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் 100க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்துகொண்டு, அதிமுக ஆட்சியில் அடிப்படை வசதிகள் மற்றும் எந்த திட்டமும் முறையாக செயல்படுத்தப்படவில்லை, முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை, சமையல் எரிவாயு விலை உயர்வு, தெருவிளக்கு இல்லை என சரமாரியாக புகார் கூறி, அதிமுகவை நிராகரிப்போம் என கோஷசம் எழுப்பினர். நிகழ்ச்சியில் நகர செயலாளர் தனபாலன், பேரூர் செயலாளர் நடேசன், ஒன்றியக்குழு தலைவர் மணிமாலா சின்னுசாமி, துத்திக்குளம் ஊராட்சி தலைவர் குணசேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கதிர்வேல், முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் பெரியசாமி, தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.