இடைப்பாடியில் எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிப்பு

இடைப்பாடி, டிச.25: இடைப்பாடியில், எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி நகர அதிமுக சார்பில் பஸ் நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட எம்ஜிஆர் படத்திற்கு முன்னாள் நகரமன்ற தலைவர் கதிரேசன், அதிமுக நகர செயலாளர் முருகன் ஆகியோர் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அச்சக கூட்டுறவு சங்க சேலம் மாவட்ட தலைவர் கந்தசாமி, நிர்வாகிகள் நாராயணன், செந்தில், உத்திர ராஜி, ராமன், மாதேஷ், சங்கர்-கணேஷ், சீனி, அறிவழகன், சுரேஷ், ஆறுமுகப்பெருமாள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: