வருவாய்த்துறையினர் காத்திருப்பு போராட்டம்

திருவண்ணாமலை, டிச.24: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு, வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தர்ணா மற்றும் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. அதன்படி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில், மாநில துணை தலைவர் பார்திபன் உட்பட பலர் கலந்து கொண்டனர். காலிப்பணியிட மதிப்பீடு அறிக்கையை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மறு நிர்ணயம் செய்ய வேண்டும், பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வை உத்தரவாதப்படுத்த வேண்டும், துணை ஆட்சியர் பட்டியலை விரைவாக வெளியிட்டு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்க நிர்வாகிகள் பேசினர்.

Related Stories: