பூதலூர் அருகே ஆற்றில் மணல் கடத்தியவர் கைது

திருக்காட்டுப்பள்ளி, டிச.24: பூதலூர் அருகே நாச்சியார்பட்டி புது ஆற்றில் சிலர் அரசு அனுமதியின்றி மணல் கடத்துவதாக பூதலூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு ரோந்துப்பணி சென்றனர். அப்போது ஒருவர் புதுஆற்றில் 5 சாக்குப்பைகளில் மணல் எடுத்து கட்டிக்கொண்டிருந்தார். விசாரணையில் அவர் மண்ணச்சநல்லூர் தாலுகா சோழங்கநல்லூர் சுப்பையன் மகன் பாலமுருகன்(33) என்பதும், அவர் அரசு அனுமதியின்றி மணல் கடத்தி விற்க முயன்றதும் தெரிய வந்தது. போலீசார் வழக்கு பதிந்து மணலுடன் பாலமுருகனை கைது செய்தனர்.

Related Stories: