ஊட்டி, டிச. 24: இங்கிலாந்தில் இருந்து நீலகிரி திரும்பிய 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறினார். சீனாவின் வுகான் நகரில் கடந்தாண்டு டிசம்பரில் இருந்து பரவ துவங்கிய கொரோனோ வைரஸ் பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. இப்பரவலை தடுக்க தற்போது தான் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பயன்பாட்டிற்கு வர துவங்கி உள்ளது. விரைவில் அனைத்து நாடுகளும் தடுப்பூசியை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இங்கிலாந்தில் மரபியல் மாற்றம் கொண்ட வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவி வருவது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தற்போதுள்ள கொரோனா வைரசை காட்டிலும் வேகமாக பரவும் தன்மை கொண்டதாக உள்ளது. இந்நிைலயில், இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளில் இருந்து நீலகிரிக்கு வந்தவர்கள் குறித்து சுகாதாரத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, இங்கிலாந்தில் இருந்து 16 பேர் நீலகிரி வந்துள்ளனர். அவர்களிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்டதில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. இருப்பினும், அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது: