சேலம் மாவட்டத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சேலம் மாவட்டம், பைரோஜி அக்ரஹாரம் குரூப் கிராமத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
சேலம் மாவட்டம், சேலம் தெற்கு வட்டம், பைரோஜி அக்ரஹாரம் குரூப் கிராமத்தில் உள்ள அரசம்பாளையம் மலை அடிவாரத்தில் 20.9.2025 அன்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் மழைநீர் தேங்கியுள்ள குட்டையில் குளித்துக் கொண்டிருந்த நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், மின்னக்கல் கிராமத்தில் வசிக்கும் திரு. சுப்பிரமணி என்பவரின் மகன்கள் திரு. நிஷாந்த் (வயது 23) மற்றும் திரு. பிரசாந்த் (வயது 19) ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இம்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

Related Stories: