திருவண்ணாமலை, டிச.22: மின்வாரியத்தில் 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை தனியார் மூலம் நிரப்பும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவண்ணாமலையில் மின் ஊழியர்கள் முற்றுகையிட்டனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 30 ஆயிரம் பணியிடங்களை, தனியார் மூலம் நிரப்பும் நடவடக்கையில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே, பணி நிரந்தரம் இல்லாமல் பல ஆண்டுகளாக போராடி வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கையாக இது அமைந்திருக்கிறது. அதோடு, படிப்படியாக மின்வாரியம் தனியார் மயமாக்கப்படும் நடவடிக்கையின் தொடக்கமாக இது அமைந்திருப்பதாக மின் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எனவே, மின்வாரியத்தை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.