விராலிமலை, டிச.22: விராலிமலை அருகே பயன்படாத விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் இறந்து கிடத்த 10க்கும் மயில்கள் குறித்து விராலிமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள விராலூர் பெரியகுளம் பாசன பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் துர்நாற்றம் அடிக்கவே அருகில் இருந்தவர்கள் கிணற்றை எட்டி பார்த்துள்ளனர். அப்போது கிணற்றினுள் 10க்கும் மேற்பட்ட மயில்கள் அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளன. இதுகுறித்து விராலூர் கிராம நிர்வாக அலுவலருக்கு இப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்துறையினர் மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.