தா.பழூர், டிச.22: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தேவமங்கலம் காந்தி நகரை சேர்ந்த அந்தோணிசாமி என்பவரது மகள் ஷகிலா (19). ஏற்கெனவே தாயை இழந்த ஷகிலா தந்தையையும் இழந்ததால் திருப்பூரில் வேலை செய்து வந்தார். தற்போது அவரது அக்கா ஷாலினியுடன் தேவமங்கலத்தில் வசித்து வந்தார். ஷகிலா கண்புருவத்தில் கட்டி இருந்ததாகவும் அதன் வலி தாங்க முடியாமல் கடந்த 19ம் தேதி அன்று எலி பேஸ்ட் சாப்பிட்டு மயங்கி கிடந்துள்ளார்.