செய்யூர்: செய்யூர் அருகே டிராக்டர் உழவு கலப்பையில் சிக்கி தந்தை கண்ணெதிரிலேயே 4 வயது மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். செய்யூர் அடுத்த புளிகொரடு கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன். விவசாயியான இவருக்கு 4 வயதில் சக்தி என்ற மகன் உள்ளார். லோகநாதன் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அவ்வப்போது டிராக்டரில் உழவு ஓட்டும் போது சக்தியும் டிராக்டரில் உடன் அமர்ந்து இருப்பது வழக்கம். நேற்று காலை லோகநாதன் வழக்கம்போல் தனது டிராக்டரில் உழவு பணியில் ஈடுபட்டபோது, தனது மகனை அருகில் அமர்த்திக் கொண்டு உழவு ஓட்டிக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக சிறுவன் சக்தி டிராக்டரில் இருந்து தவறி விழுந்து டிராக்டரின் பின்னால் இருந்த உழவு கலப்பையில் சிக்கிக்கொண்டார்.