சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு கொன்னைபட்டியில் ஐயப்ப பக்தர்கள் திருவிளக்கு பூஜை

பொன்னமராவதி, டிச.21: பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைபட்டியில் ஐயப்ப பக்தர்களால் திருவிளக்கு பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைப்பட்டி ஊரில் ஆண்டுதோறும் ஐயப்ப பக்தர்களால் மார்கழி மாதம் 4ம் தேதி திருவிளக்கு பூஜை மற்றும் அன்னதான விழா சிறப்பாக நடைபெறும் இதில் ஏராளமான சுமங்கலிப்பெண்கள் , கன்னிப்பெண்கள் கலந்து கொள்வர். இப்பூஜையில் கலந்து கொள்வதால் ஊர் ஒற்றுமை, உடல் நலம், தொழில் விருத்தி, திருமணம் தடை நீங்குகிறது, புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த விளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் விளக்குப்பூஜை மலர் மற்றும் குங்குமத்தினால் அர்ச்சனை செய்தனர்.

Related Stories: