தென்தாமரைகுளம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

தென்தாமரைகுளம், டிச.21: தென்தாமரைகுளம் அருகே சோட்டப்பணிக்கன் தேரிவிளையை சேர்ந்தவர் யோபு(38), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி நாகம்மாள் (33). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். யோபு வீட்டு அருகே உள்ள தோட்டத்திற்கு குளிக்க சென்றார். அங்கு மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. யோபு அதை கவனிக்காத நிலையில் அவரது கை அதில் பட்டதில் அவரை மின்சாரம் தாக்கியது. இதைக்கண்ட அவரது 10 வயது மகன் அர்ஜுன் தந்தையை காப்பாற்ற முயன்றார்.

அப்போது அவரையும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. அதிர்ஷ்ட வசமாக சிறுவன் உயிர்தப்பினார். படுகாயமடைந்த யோபுவை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது யோபு உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.  யோபுவின் மனைவி நாகம்மாள் கரும்பாட்டூர் ஊராட்சி 7ம் வார்டு உறுப்பினராக உள்ளார்.

Related Stories: