தென்தாமரைகுளம், டிச.21: தென்தாமரைகுளம் அருகே சோட்டப்பணிக்கன் தேரிவிளையை சேர்ந்தவர் யோபு(38), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி நாகம்மாள் (33). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். யோபு வீட்டு அருகே உள்ள தோட்டத்திற்கு குளிக்க சென்றார். அங்கு மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. யோபு அதை கவனிக்காத நிலையில் அவரது கை அதில் பட்டதில் அவரை மின்சாரம் தாக்கியது. இதைக்கண்ட அவரது 10 வயது மகன் அர்ஜுன் தந்தையை காப்பாற்ற முயன்றார்.