மதுரை, டிச.18: விவசாயிகள் ஒன்றிணைந்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை தொடங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை கலெக்டர் அன்பழகன் கூறும்போது, ‘‘மூலதன பங்கை அதிகரிக்கும் வகையில், அரசின் சார்பில் ரூ.10 லட்சம் வரை இடைக்கால மூலதன கடன் கொடுக்கப்படும். இந்த தொகையை கொண்டு நிறுவனங்கள் தங்கள் விளைபொருட்களை லாபகரமாக சந்தைப்படுத்தலாம். 5 ஆண்டுகள் கழித்து கடனை செலுத்தினால் போதும். ஆண்டுதோறும் 4 சதவீத வட்டி வசூலிக்கப்படும்.