விருதுநகர், டிச.16: விருதுநகர், சாத்தூரில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தென்மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று விருதுநகர் மாவட்டத்தில் பிரச்சாரத்திற்கு வந்த கமல்ஹாசனுக்கு விருதுநகர் நான்கு வழிச்சாலை பிஆர்சி பணிமனை முன்பாக மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து கச்சேரி ரோடு, மாரியம்மன் கோவில் வழியாக வந்து தேசபந்து மைதானம் அருகில் மூளிப்பட்டி அரண்மணை முன்பாக பிரச்சாரம் செய்ய மக்கள் நீதி மய்யம் சார்பில் போலீஸ் அனுமதி கோரியிருந்தனர்.