தேவேந்திரகுல வேளாளர் பட்டியலை உடனே வழங்க கோரி தமமுக மனிதசங்கிலி ேபாராட்டம்

கரூர், டிச.16: தேவேந்திர வேளாளர் பட்டியலை உடனே வழங்க கோரி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. கரூர் தபால் தந்தி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். ஏராளமானோர் கலந்து கொண்டு கைகளை கோர்த்துக் கொண்டு மனித சங்கிலியாக நின்று போராட்டம் நடத்தினர்.தேவேந்திர குல வேளாளர் பெயர் பட்டியலை உடனடியாக வழங்க கோரி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: