எஸ்ஐ வீட்டில் கொள்ளை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த தொழுவூர் வீரராகவ நகரை சேர்ந்தவர் செந்தில் விநாயகம்(65). சென்னையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு கடந்த 8ம் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்தாருடன் திருநெல்வேலிக்கு சென்றார். நேற்று காலை திரும்பி வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 8 சவரன் தங்க நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில் செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Related Stories: