திருப்பரங்குன்றம், டிச. 11: திருப்பரங்குன்றம் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று திருநகரில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. சேர்மன் (திமுக) வேட்டையன் தலைமை வகிக்க, ஆணையாளர் ஆசிக் முன்னிலை வகித்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியன், திமுக- அதிமுக கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் துவங்கியதுமே, திமுக கவுன்சிலர்கள் திடீரென எழுந்து தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் ஆணையாளர், வட்டார வளர்ச்சி அலுவலருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது திமுக கவுன்சிலர் சுரேஷ் பேசுகையில், ‘சின்னசாக்கலிபட்டி பகுதியில் குடிநீர் வசதியின்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.