ஆர்.எஸ்.மங்கலம், டிச.10: ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட அலியார் சாலை வாகன போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியாகும். இப்பகுதியில் சாலையை கடந்து செல்லும்போது வேகத்தடை இல்லாத காரணத்தால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது. பூவாணிக்கரை, பிரிட்டோ மழலையர் தொடக்கப்பள்ளி மற்றும் பள்ளிவாசல் ஆகிய இடங்களில் வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் சாலையை கடந்து செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே சாலையில் முக்கிய இடங்களில் வேகத்தடை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.