சென்னை: சென்னை உயர் நீதிமன்ற மாநில அரசு உரிமையியல் வழக்குரைஞர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்ட அலுவலர்களின் கட்டிடத்தில், மாநில அரசு உரிமையியல் வழக்குரைஞர் அலுவலகம், மாநில அரசு குற்றவியல் அலுவலகம், கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் அலுவலகங்கள் உள்பட பல சட்ட அலுவலர்களின் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
இந்த கட்டிடம் முழுமைக்கும் தூய்மைப்பணி மேற்கொள்ள தகுதிவாய்ந்த முன் அனுபவமுள்ள தூய்மைப்பணி மேற்கொள்ளும் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் வரவேற்கப்படுகின்றன. கட்டிடத்தை பார்வையிட 10.9.2025 தேதி வரை விண்ணப்பதாரர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதையடுத்து 19.9.2025 அன்று மாலை 5.45 மணிக்குள் மூடி முத்திரையிடப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பலாம்.
‘மாநில அரசு உரிமையியல் வழக்குரைஞர் அலுவலகம், சட்ட அலுவலர்கள் கட்டிடம், உயர் நீதிமன்றம், சென்னை-600104’ என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் அனுப்பலாம். விண்ணப்ப உறை மேல் ‘அலுவலக தூய்மைப்பணிக்காக’ எனக் குறிப்பிட வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 – 25341024 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
