திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதாக சென்னை வனத்துறை அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சென்னை வன பாதுகாவலர் ஞானசேகர் தலைமையிலான 10 பேர் கொண்ட வனத்துறையினர் கடந்த 10 நாட்களாக தீவிர ஆய்வு மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில் திருவள்ளூர் அடுத்த பாப்பரம்பாக்கம் கிராமத்தில் உள்ள கிடங்கில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் முரளி என்பவருக்கு சொந்தமான கிடங்கில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து வருவது தெரியவந்தது.