திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பூண்டி நீர்த்தேக்கத்தில் உபரி நீர் வெள்யேற்றப்பட்டு வருவதால் ஏராளமான பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் நேரில் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் அடுத்த அரண்வாயல் குப்பம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (22), பிரபுகுமார் (22), மற்றும் திருவள்ளூர் ஆயில் மில் பகுதியை சேர்ந்த குணா (22) உள்பட 10 இளைஞர்கள் நேற்று மதியம் 2 மணி அளவில் பூண்டி நீர்தேக்கம் சென்று செல்போனில் செல்பி எடுத்து கொண்டிருந்தனர். அப்போது, பூண்டி நீர்த்தேக்கத்தின் உட்புறமாக பேபி கால்வாய் அருகே கரையோரத்தில் நிறுத்தி வைத்திருந்த சதுரங்கப்பேட்டையை சேர்ந்த மீனவர் சீனிவாசன் என்பவரது மீன்பிடிக்கும் படகை எடுத்துக் கொண்டு வெங்கடேசன், பிரபுகுமார், குணா ஆகிய 3 பேரும் பூண்டி நீர்த்தேக்கத்தின் உள்புறமாக சென்றுள்ளனர்.