வேலூர், டிச.9: வேலூர் மாவட்டத்தில் தொடரும் திருட்டால் எஸ்பி உத்தரவின்பேரில் 34 போலீஸ் குழுவினர் நேற்று லாட்ஜ்களில் திடீர் ரெய்டு நடத்தினர். வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, வேலூர், சத்துவாச்சாரி, குடியாத்தம் உட்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு மாதத்தில் வீடு புகுந்து திருடுவது, வழிப்பறி, வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பது போன்ற குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதில் வேலூரில் பிரியாணிக்கடை உரிமையாளர் வீட்டில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 250 சவரன் நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இப்படி தொடர்ந்து மாவட்டம் முழுவதும் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்தது. இதில் பிரியாணிக்கடை உரிமையாளர் வீட்டில் திருடியது ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து பிடிபட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.